search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மாலத்தீவில் எதிர்ப்பு- சிங்கப்பூர் செல்ல கோத்தபய ராஜபக்சே திட்டம்
    X

    கோத்தபய ராஜபக்சே

    மாலத்தீவில் எதிர்ப்பு- சிங்கப்பூர் செல்ல கோத்தபய ராஜபக்சே திட்டம்

    • வேறு நாட்டில் தஞ்சம் அடையும் நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டார்.
    • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மாலே சென்றதாக தகவல்,

    மாலத்தீவு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டு அதிபர் மாளிகையை முற்றியிட்டு அதை கைப்பற்றினர். முன்னதாக அங்கிருந்து வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, தமது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானம் மூலம் நேற்று மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.

    அங்குள்ள மாலே நகர் பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் தங்கி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாலத்தீவு மக்கள் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. அவரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தையூப் சாஹிம் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டார். இந்நிலையில் தற்போது அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மாலே சென்றதாக கூறப்படுகிறது.

    இன்று இரவு மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு கோத்தபய புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் ஏறவில்லை என்றும், தனியார் விமானம் ஒன்றிற்காக அவர் காத்திருப்பதாகவும், டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×