என் மலர்tooltip icon

    உலகம்

    பிரேசிலின் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி
    X

    பிரேசிலின் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

    • போல்சனரோ வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
    • அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

    சாவ் பாவ்லா:

    பிரேசிலின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெய்ர் போல்சனாரோ.

    இவர் நேற்று முன்தினம் வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவரது அரசியல் கட்சி தெரிவித்தது.

    வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவில் உள்ள ஒரு சிறிய நகரமான சாண்டா குரூசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த வலி கடந்த 2018 செப்டம்பரில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கத்திக்குத்தின் நீண்டகால விளைவுகளுடன் தொடர்புடையது என அவரது லிபரல் கட்சி தெரிவித்தது.

    மருத்துவமனையில் போல்சனாரோவை கண்காணித்து வரும் மருத்துவக் குழு, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்தது.

    Next Story
    ×