என் மலர்tooltip icon

    உலகம்

    வங்கதேசத்தில் மற்றொரு இந்துத் தலைவர் காவலில் மரணம்!
    X

    வங்கதேசத்தில் மற்றொரு இந்துத் தலைவர் காவலில் மரணம்!

    • ஜன.11ம் தேதி ப்ரோலாய் சக்கி உயிரிழந்தார்.
    • கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் காலமானார்.

    மூத்த அவாமி லீக் தலைவரும், முன்னாள் அமைச்சரும், கல்வியாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் சந்திர சென், 86, நேற்று (பிப்.8) இரவு நீதிமன்றக் காவலில் காலமானார். 2024 ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசு பதவி விலகிய பிறகு, அவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு தினாஜ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    சிறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தினாஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமின் வழங்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி 11-ம் தேதி, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு இந்துத் தலைவரும், இசைக் கலைஞருமான ப்ரோலாய் சக்கி என்பவரும் ராஜஷாஹி சிறைக் காவலில் இருந்தபோது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடர் மரணங்கள் சிறுபான்மையினர் மற்றும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

    Next Story
    ×