search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் சோகம் - ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் பலி
    X

    ஹெலிகாப்டர் விபத்து

    பாகிஸ்தானில் சோகம் - ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் பலி

    • பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது.
    • இந்த விபத்தில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

    பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

    இதில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×