என் மலர்
உலகம்

பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி
- கைபர் பக்துன்வாவில் உள்ள குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
- இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story






