என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்

X
அமெரிக்காவில் விமான விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு
By
மாலை மலர்30 July 2023 5:48 AM GMT

- ஹெலிகாப்டரும் கைரோகாப்டரும் தரையிறங்கும்போது மோதிக்கொண்டன.
- தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் வின்கான்சின் மாநிலத்தில் உள்ள ஓஷ்கோஸ் நகரில் பரிசோதனை விமான சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது. இதில், நேற்றைய நிகழ்வின்போது ரோட்டார்வே 162எப் ஹெலிகாப்டரும், இஎல்ஏ எக்லிப்ஸ் 10 கைரோகாப்டரும் தரையிறங்கும்போது நடுவானில் மோதிக்கொண்டன. இதில், 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இதேபோல் ஓஷ்கோஷ் அருகே வின்னபாகோ ஏரியில் ஒரு சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
