என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
அமெரிக்காவில் பார்க்கிங் பகுதியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி- 5 பேர் கவலைக்கிடம்
- துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.
அமெரிக்காவில் உள்ள மிசவுரி கன்சாஸ் நகரின் டவுன்டவுனில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் போலீசார் விரைந்தனர். அங்கு, துப்பாக்கிச்சூடு காயங்களுடன் 8 பேர் கிடந்தனர். இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்