search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் மீண்டும் சோகம் - பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 7 பேர் பலி
    X

    அமெரிக்காவில் மீண்டும் சோகம் - பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 7 பேர் பலி

    • அமெரிக்காவின் நாஷ்வில்லேவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின.

    தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×