என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து- 28 பேர் பலி
- பேருந்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்
- பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்துகளே விபத்தில் சிக்குகின்றன.
கராச்சி:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று எண்ணெய் ஏற்றி வந்த லாரியின் பின்புறம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. முல்தான்-சிக்கூர் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர். பேருந்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிந்து மாகாணத்தின் கராச்சி சாலையில் ரோஹ்ரி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
சிந்து மற்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்துகளே விபத்தில் சிக்குகின்றன. அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், வாகன உரிமம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சரியாக சோதனை செய்யாதது போன்ற காரணங்களால் விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்