என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி
Byமாலை மலர்4 Jun 2022 2:11 AM GMT (Updated: 4 Jun 2022 2:11 AM GMT)
பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுநர்கள் உட்பட, அனைவரும் தடுப்பூசி போடுமாறு பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.
பாரீஸ்
உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் வெளிப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிடும் என்று கூறுகிறது. இது தொடர்பாக பிரெஞ்சு சுகாதார அமைப்பு கூறும்போது, இதுபோன்ற நோய்த்தொற்றை எதிர்பார்க்கவில்லை என்றும் நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும் கூறியது.
மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுநர்கள் உட்பட, அனைவரும் தடுப்பூசி போடுமாறு பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.
உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் வெளிப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிடும் என்று கூறுகிறது. இது தொடர்பாக பிரெஞ்சு சுகாதார அமைப்பு கூறும்போது, இதுபோன்ற நோய்த்தொற்றை எதிர்பார்க்கவில்லை என்றும் நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும் கூறியது.
மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுநர்கள் உட்பட, அனைவரும் தடுப்பூசி போடுமாறு பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X