search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மாயமான விமானம்
    X
    மாயமான விமானம்

    நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு

    நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் 9 என்ஏஇடி விமானத்தின் தகவல் தொடர்பு இன்று காலை துண்டிக்கப்பட்டு மாயமானது.
    காத்மாண்டு:

    நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்த
    விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×