என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - பொது மக்கள், வீரர்கள் தஞ்சம் அடைந்துள்ள ஆலையை தாக்கும் முயற்சியில் ரஷிய ராணுவம்
Byமாலை மலர்23 April 2022 7:00 PM GMT (Updated: 24 April 2022 1:33 PM GMT)
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதமாகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
24.4.22
18.30: துருக்கி அதிபர் எர்டோகன் இன்று உக்ரைன் அதிபரை ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அனைத்து உதவிகளையும் செய்ய துருக்கி தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
18.00: மரியுபோலில் மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் எஃகு ஆலையை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள், ஆலையை தரை வழியாகத் தாக்க முயற்சிப்பதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
17.30: ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16.00: உக்ரைனின் மரியுபோலில் உள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.
13.40: மரியுபோலில் உள்ள எக்கு ஆலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். சரண் அடையுமாறு ரஷியா தெரிவித்ததை எக்கு ஆலையில் உள்ள உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
அந்த ஆலையை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொது மக்கள், வீரர்கள் தஞ்சம் அடைந்துள்ள ஆலையை தாக்கும் முயற்சியில் ரஷிய ராணுவம் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த ஆலையை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொது மக்கள், வீரர்கள் தஞ்சம் அடைந்துள்ள ஆலையை தாக்கும் முயற்சியில் ரஷிய ராணுவம் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
06.25: மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தபோதிலும் அங்கு கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடக்கின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன. இதனால் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியாவின் முன்னேற்றம் வேகம் எடுக்கவில்லை என இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
03.15: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.
00.30: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தருகின்றனர் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X