என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ரஷிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து- 6 பேர் பலி
Byமாலை மலர்22 April 2022 9:50 AM GMT (Updated: 22 April 2022 9:50 AM GMT)
தீ விபத்து ஏற்பட்டதும் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பலர் ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து உயிர்தப்பினர்.
மாஸ்கோ:
ரஷியாவின் டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த அலுவலகத்தின் ஒரு தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பலர் ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து உயிர்தப்பினர்.
எனினும் சிலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டனர். தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய விமான எதிர்ப்பு அமைப்புகளின் மேம்பாட்டில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X