என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இலங்கையில் புதிய திருப்பம்- நிதியமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் அலி சப்ரி ராஜினாமா
Byமாலை மலர்5 April 2022 7:39 AM GMT (Updated: 5 April 2022 10:14 AM GMT)
4 பேர் மந்திரிகளாக முதலில் பதவி ஏற்றனர். புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி அறிவிக்கப்பட்டு உள்ளார். வெளியுறவு மந்திரியாக பீரிஸ், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பதவி ஏற்றனர்.
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த தவறான பொருளாதார முடிவுகளால் அந்த நாட்டின் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்துவிட்டன. அதுமட்டுமின்றி அரிசி, கோதுமை, டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் ஒவ்வொரு நாளும் இதுவரை இல்லாத அளவுக்கு துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளதால் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 26 அமைச்சர்களும் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், இலங்கையின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்திற்குள் பதவி விலகியுள்ளார். இதனால் இலங்கை அரசில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை: பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியை ஒப்படைக்கத் தயார்- கோத்தபய ராஜபக்சே
ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளதால் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 26 அமைச்சர்களும் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிய காபந்து அமைச்சரவை உடனடியாக அமைக்கப்பட்டது.
அதில் 4 பேர் மந்திரிகளாக முதலில் பதவி ஏற்றனர். புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி அறிவிக்கப்பட்டு உள்ளார். வெளியுறவு மந்திரியாக பீரிஸ், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், இலங்கையின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்திற்குள் பதவி விலகியுள்ளார். இதனால் இலங்கை அரசில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை: பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியை ஒப்படைக்கத் தயார்- கோத்தபய ராஜபக்சே
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X