என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட்
அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: ஆப்கன் பிரதமர்
By
மாலை மலர்28 Nov 2021 7:21 AM GMT (Updated: 28 Nov 2021 7:21 AM GMT)

ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது என்றும் அது எங்கள் கொள்கை அல்ல என்றும் அந்நாட்டு தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
அப்போது, கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்றும் தலிபான் அமைப்பு கூறியது.
ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையும், அடுத்தடுத்த தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
இதற்கு அண்டை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-
இஸ்லாமிய எமிரேட் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு, பொருளாதார உறவு மற்றும் சக வாழ்க்கை கொண்டிருக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது. அது எங்கள் கொள்கை அல்ல.
ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம். ஆப்கானிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பது யாருக்கும் பயனளிக்காது.
இவ்வாறு கூறினார்.
இதையும் படியுங்கள்.. மேற்கு வங்காளத்தில் கோர விபத்து: லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
