என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைவருக்கும் பொதுமன்னிப்பு: தலிபான் செய்தி தொடர்பாளர்
Byமாலை மலர்17 Aug 2021 2:44 PM GMT (Updated: 17 Aug 2021 2:44 PM GMT)
ஆப்பானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அரசாங்கத்தில் பெண்கள் இணைய வேண்டும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்திவிட்டு தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். ராணுவம் முதல் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால், என்ன ஆகுமோ? என மக்கள் அச்சப்பட்டுள்ளனர்.
இதனால் காபூலில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். நேற்று அமெரிக்க ராணுவ விமானத்தில் செல்வதற்கு மக்கள் அலைமோதினர். அதில் சிலர் விமானத்தின் தொங்கியபடி பயணம் செய்ய முயன்றனர். அப்போது கீழே விழுந்து மூன்று பேர் பலியானார்கள்.
கவிழ்க்கப்பட்ட ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சுதந்திரம் தற்போது பறிபோகுமோ? என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்த நிலையில் தலிபான்கள் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறுகையில் ‘‘விமானத்தில் இருந்து மூன்று பேர் விழுந்து உயிரிழக்க அமெரிக்காதான் காரணம். தலிபான்கள் அதற்கு பொறுப்பேற்க முடியாது. ஆப்கானிஸ்தான் மிகவும் ஏழ்மையான நாடு என்பதால் மக்கள் வெளியேற விரும்புகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைவருக்கும் பொதுமன்னிப்பு. பெண்கள் அரசாங்கத்தில் இணைய வேண்டும்.
நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. எந்த அமைப்பு, ராணுவ அமைப்பிலும் கிடையாது. ஆப்கானிஸ்தானை கட்டமைக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X