என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பிரேசிலில் மட்டும் 93 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 686 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கொரோனாவில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

    ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

    அமெரிக்கா - 1,57,877
    பிரேசில் - 93,616
    மெக்சிகோ - 46,688
    இங்கிலாந்து - 46,193
    இந்தியா - 36,511 
    இத்தாலி - 35,146
    பிரான்ஸ் - 30,265
    ஸ்பெயின் - 28,445
    Next Story
    ×