search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு

    வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சீனர்களால் இரண்டாம் கட்டமாக நோய் பரவல் உருவாகி இருப்பதாக சீனாவில் கவலை எழுந்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 61 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். இதையடுத்து, வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மேலும் 2 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது.

    சீனாவில் இயல்புநிலை திரும்பி வருகிறது. கொரோனா தோன்றிய வுகான் நகரில் நேற்று முன்தினம் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.

    அதே சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சீனர்களால் இரண்டாம் கட்டமாக நோய் பரவல் உருவாகி இருப்பதாக சீனாவில் கவலை எழுந்துள்ளது.
    Next Story
    ×