என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் விமான நிலைய கட்டிடத்தில் மோதி தீப்பிடித்த விமானம்- 10 பேர் பலி
Byமாலை மலர்1 July 2019 5:48 AM GMT (Updated: 1 July 2019 5:48 AM GMT)
அமெரிக்காவின் டல்லாஸ் அருகே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
டல்லாஸ்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே உள்ள அடிசன் விமான நிலையத்தில் இருந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட அந்த சிறிய ரக விமானம், ரன்வேயில் ஓடி மேலே எழும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் திரும்பி, விமான நிலைய ஹேங்கர் மீது மோதியது.
நேற்று நடந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் பலியாகினர். விமானம் மோதியதால் ஹேங்கர் கட்டிடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததுடன், கட்டிடமும் தீப்பிடித்தது. அந்த கட்டிடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
விமானம் தரையில் விழுந்து தீப்பிடிக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே உள்ள அடிசன் விமான நிலையத்தில் இருந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட அந்த சிறிய ரக விமானம், ரன்வேயில் ஓடி மேலே எழும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் திரும்பி, விமான நிலைய ஹேங்கர் மீது மோதியது.
பின்னர் சிறிது தொலைவு சென்று தரையில் விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
நேற்று நடந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் பலியாகினர். விமானம் மோதியதால் ஹேங்கர் கட்டிடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததுடன், கட்டிடமும் தீப்பிடித்தது. அந்த கட்டிடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
விமானம் தரையில் விழுந்து தீப்பிடிக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X