search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் குட்டி விமானம் நொறுங்கியது- 4 பேர் பலி
    X

    துபாயில் குட்டி விமானம் நொறுங்கியது- 4 பேர் பலி

    துபாய் விமான நிலையத்தின் அருகே குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை.
    துபாய்:

    துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ‘ஹனிவெல்’லுக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர்.

    விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில வினாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    உடனே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை. அதே நேரத்தில் சில விமானங்கள் வேறு மார்க்கமாக இயக்கப்பட்டன. நிலைமை சீரடைந்ததும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×