என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோமாலியாவில் அமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - இரு நாட்களில் 60 கிளர்ச்சியாளர்கள் பலி
Byமாலை மலர்17 Dec 2018 4:13 PM GMT (Updated: 17 Dec 2018 4:13 PM GMT)
அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் கடந்த இரு நாட்களில் சோமாலியாவில் 60க்கு மேற்பட்ட அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். #Somalia #USAirStirkes
மொகடிஷு:
சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.
இந்நிலையில், சோமாலியா நாட்டில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 34 பேர், நேற்று நடத்திய தாக்குதலில் 28 பேர் என மொத்தம் 62 அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X