search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்பெயின் நாட்டில் பிரிவினையாளர்கள், போலீஸ் மோதல்
    X

    ஸ்பெயின் நாட்டில் பிரிவினையாளர்கள், போலீஸ் மோதல்

    ஸ்பெயின் பார்சிலோனா நகரில் கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. #Spain #Barcelona
    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதியில் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு ஏற்றுமதியை கேட்டலோனியா பகுதி செய்கிறது. அப்படிப்பட்ட கேட்டலோனியாவை தனி நாடாக பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து போராடுகிறவர்கள், பிரிவினையாளர்களாக கருதப்படுகின்றனர்.



    தனிநாடு கோரிக்கை தொடர்பாக அங்கு கடந்த ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் மக்கள் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தும், அது செல்லாது என அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    அந்த பொதுவாக்கெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பார்சிலோனா உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் பெருவாரியாக திரண்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

    பார்சிலோனா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள், நெடுஞ்சாலைகள், ரெயில் பாதைகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்ததால், போக்குவரத்தும் பாதித்தது.  #Spain #Barcelona 
    Next Story
    ×