என் மலர்
செய்திகள்

நைஜீரியா போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி
நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Nigeria #BokoHaramAttack
கனோ:
நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாகாணத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு கிராமங்களில் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். #Nigeria #BokoHaramAttack
Next Story






