என் மலர்
செய்திகள்

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஈக்வடார் நாட்டின் மத்திய பகுதியில் சுமார் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #EuadorEarthquake
குவைட்டோ:
ஈக்வடார் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடந்த 2016-ம் ஆண்டில் ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 650-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #EuadorEarthquake
Next Story






