search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் ‘எச்1-பி’ விசா மோசடியில் இந்திய அதிகாரி கைது
    X

    அமெரிக்காவில் ‘எச்1-பி’ விசா மோசடியில் இந்திய அதிகாரி கைது

    அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இந்தியர், ‘எச்1-பி’ விசா மோசடியில் கைது செய்யப்பட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ‘எச்1-பி’ விசா வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

    அதில் முறைகேடு செய்து ஊழியர்களை பணியில் நியமித்ததாக பிரதியும்னா குமார் காமல் (49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க குடியுரிமை துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    இந்த நிலையில் அவர் சீட்டில் விமானநிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியேறவிடாமல் இவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியரான இவர் அமெரிக்காவில் 2 தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘எச்பி-1’ விசா மோசடி மூலம் அமெரிக்காவில் பணிபுரிவதாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×