search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் - நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு ஆளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    X

    பிரிட்டன் - நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு ஆளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    பிரிட்டனில் நோவிசோக் நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். #UKPairPoisoned #NovichokAttack
    லண்டன்:

    பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு ரசாயன விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, பிரிட்டனில் மீண்டும் அதே போன்ற விஷ தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கிலாந்தின் வில்ட்ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில் கடந்த வாரம் தம்பதியர் சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம் அவர்களின் வீட்டில் சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    அங்கிருந்து அவர்கள் மீட்கப்பட்டு சாலிஸ்பரி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் நச்சு வேதிப்பொருள் அவர்களின் உடலில் கலந்துள்ளது.

    இந்த தம்பதியர் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளானதை முடிவு செய்ய அவர்களின் நடத்தை பற்றி விரிவான சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வில்ட்ஷயர் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், நோவிகோச் நச்சுத் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டான் ஸ்டர்ஜஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே, நச்சுத்தாக்குதலுக்கு பலியான டான் ஸ்டர்ஜஸ் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #UKPairPoisoned #NovichokAttack
    Next Story
    ×