என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் வழக்கில் இந்தோனேசிய கவர்னர் கைது
Byமாலை மலர்5 July 2018 8:00 PM GMT (Updated: 5 July 2018 8:00 PM GMT)
இந்தோனேசியாவில் அரசு நிதியை சட்ட விரோதமாக திட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டி ஊழலில் ஈடுபட்டதாக கவர்னர் இரவாண்டி யூசுபை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். #Indonesia #GovernorIrwandiYusuf
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் ஆஷே மாகாணத்தில், முதன்முதலாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பதவியில் இருந்து வந்தவர், இரவாண்டி யூசுப். இவர் முன்னாள் கிளர்ச்சியாளர் ஆவார்.
தேசத்துரோக குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, சிறையில் இருந்து தப்பித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. பின்னர் இவர் அரசுடனான சமரச உடன்படிக்கைக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்டு கவர்னர் ஆனார்.
இவர் 500 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.3,400 கோடி) மேற்பட்ட அரசு நிதியை சட்ட விரோதமாக திட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது தொடர்பாக இவர் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இவரை ஊழல் தடுப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த ஆஷே மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது, இங்கு இஸ்லாமிய மதச்சட்டம் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesia #GovernorIrwandiYusuf #Tamilnews
இந்தோனேசியாவில் ஆஷே மாகாணத்தில், முதன்முதலாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பதவியில் இருந்து வந்தவர், இரவாண்டி யூசுப். இவர் முன்னாள் கிளர்ச்சியாளர் ஆவார்.
தேசத்துரோக குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, சிறையில் இருந்து தப்பித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. பின்னர் இவர் அரசுடனான சமரச உடன்படிக்கைக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்டு கவர்னர் ஆனார்.
இவர் 500 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.3,400 கோடி) மேற்பட்ட அரசு நிதியை சட்ட விரோதமாக திட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது தொடர்பாக இவர் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இவரை ஊழல் தடுப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த ஆஷே மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது, இங்கு இஸ்லாமிய மதச்சட்டம் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesia #GovernorIrwandiYusuf #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X