search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷிய பத்திரிகையாளர் பத்திரமாக உள்ளார்
    X

    உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷிய பத்திரிகையாளர் பத்திரமாக உள்ளார்

    உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஆர்கடி பாப்சென்கோ பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Russianjournalist #ArkadyBabchenko #Ukraine

    கெய்வ்:

    ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார். 

    இதனிடையே, அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வைத்து சில மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பத்திரிக்கையில் செய்தி வெளியிவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அவர் கொல்லப்பட்டதற்கு ரஷியா தான் காரணம் எனவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், அவர் தற்போது பத்திரமாக இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. பாப்சென்கோவை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்ட உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை காப்பாற்றியுள்ளனர். உயிரை காப்பாற்றிய உக்ரைன் அதிகாரிகளுக்கு பாப்சென்கோ நன்றி தெரிவித்துள்ளார். #Russianjournalist #ArkadyBabchenko #Ukraine
    Next Story
    ×