என் மலர்
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடித்ததைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே சண்டை நடைபெற்று வருகிறது. #AfghanAttack
காபூல்:
ஆப்கானிஸ்தானில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தலிபான்களும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கடந்த சில மாதங்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பையும் மீறி காபூலில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகே பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் முதல் சோதனைச் சாவடி அருகே குண்டு வெடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் உயிரிழப்போ காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தாக்குதல் எந்த அமைப்பால் நடத்தப்பட்டது என்ற தகவலும் வெளியாகவில்லை. #AfghanAttack
ஆப்கானிஸ்தானில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தலிபான்களும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கடந்த சில மாதங்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் காபூலின் முக்கிய பகுதிகளை தாக்கப்போவதாக தலிபான் இயக்கம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது. ராணுவம் மற்றும் உளவுத்துறை மையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டது. இதையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த பாதுகாப்பையும் மீறி காபூலில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகே பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் முதல் சோதனைச் சாவடி அருகே குண்டு வெடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் உயிரிழப்போ காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தாக்குதல் எந்த அமைப்பால் நடத்தப்பட்டது என்ற தகவலும் வெளியாகவில்லை. #AfghanAttack
Next Story