search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் லாட்டரியில் ரூ.12 கோடி வென்ற இந்தியர்
    X

    துபாய் லாட்டரியில் ரூ.12 கோடி வென்ற இந்தியர்

    துபாய் நாட்டில் நடைபெற்ற ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஒருவர் சுமார் 12 கோடி ரூபாய் வென்றுள்ளார். #BigTicketmillionairedraw #AnilVargheseTheveril

    துபாய்:

    கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனில் வர்கீஸ் தெவரில் (50) துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரது மகன் கேரளாவில் கல்லூரி படித்து வருகிறான்.

    அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை அனில் வாங்கி இருந்தார். தனது மகனின் பிறந்தநாளை வைத்து 11197 என்ற எண்ணுடைய லாட்டரி சீட்டை அவர் வாங்கி இருந்தார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு 12 கோடி ரூபாய்) கிடைத்துள்ளது. இதுதவிர மேலும் ஐந்து இந்தியர்களுக்கு தலா ஒரு லட்சம் திர்ஹம் பரிசு விழுந்துள்ளது.

    இந்த தொகையை வைத்து என்ன செய்வது என இனிதான் யோசனை செய்ய இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    என் மகன் தான் எனது அதிர்ஷ்டம். அந்த டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கினேன். என் மகனின் பிறந்த தேதி 11/97 என்பதால், 11197 என்ற எண்ணை தேர்ந்தெடுத்தேன். பிக் டிக்கெட் மூலம் எனது அதிர்ஷ்டத்தை சோதிப்பது இது இரண்டாவது முறை. நான் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையை இன்னும் நம்ப முடியவில்லை. சமீபத்தில் எனக்கு பல பிரச்சனைகள் வந்தது. அது எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பரிசுத்தொகையை வைத்து என்ன செய்ய வேண்டும் என இனிதான் யோசனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BigTicketmillionairedraw #AnilVargheseTheveril
    Next Story
    ×