என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏமனில், ஏடன் நகரை தக்க வைக்க கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் கடும் சண்டை: 10 பேர் பலி
Byமாலை மலர்29 Jan 2018 6:28 AM GMT (Updated: 29 Jan 2018 6:28 AM GMT)
ஏமன் அரசின் தலைநகராக விளங்கும் ஏடன் நகரை தக்க வைத்து கொள்ள கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் பெண்கள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஏடன்:
ஏமனில் அதிபர், மன்சூர் ஹாதியின் தலைமையில் இயங்கும் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
அதிபர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ளது. இதனால் தொடர்ந்து கடுமையான போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அதிபர் ஹாதியின் ஆதரவாளர்கள் இடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பிரதமர் பின் டாகர் தலைமையில் செயல்படுகின்றனர். அதிபர் ஹாதியின் தலைமையில் இயங்கும் அரசின் தலைநகராக விளங்கும் ஏடனை கைப்பற்ற திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
அதனால் இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. இதனால் ஏடன் நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் நடமாட்டம் இன்றி ரோடுகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
இந்த சண்டையில் 10 பேர் பலியாகினார்கள். அவர்களில் இரு தரப்பையும் சேர்ந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. #tamilnews
ஏமனில் அதிபர், மன்சூர் ஹாதியின் தலைமையில் இயங்கும் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
அதிபர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ளது. இதனால் தொடர்ந்து கடுமையான போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அதிபர் ஹாதியின் ஆதரவாளர்கள் இடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பிரதமர் பின் டாகர் தலைமையில் செயல்படுகின்றனர். அதிபர் ஹாதியின் தலைமையில் இயங்கும் அரசின் தலைநகராக விளங்கும் ஏடனை கைப்பற்ற திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
அதனால் இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. இதனால் ஏடன் நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் நடமாட்டம் இன்றி ரோடுகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
இந்த சண்டையில் 10 பேர் பலியாகினார்கள். அவர்களில் இரு தரப்பையும் சேர்ந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X