என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 455 கிலோ எடை வெடிகுண்டு ஹாங்காங்கில் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்29 Jan 2018 5:25 AM GMT (Updated: 29 Jan 2018 5:25 AM GMT)
இரண்டாம் உலகப் போரின் போது ஹாங்காங் மீது வீசப்பட்டிருந்த 455 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மண்ணில் புதைந்திருந்த நிலையில் தற்போது கண்டறிந்து செயல் இழப்பு செய்யப்பட்டது.
ஹாங்காங்:
ஹாங்காங்கில் வாங்சை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பூமியை தோண்டிய போது வெடிக்காத நிலையில் புதைந்து கிடந்த வெடி குண்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த அவர்கள் அக்குண்டை பரிசோதித்தனர். அது 1000 பவுண்டு அதாவது 455 கிலோ எடை இருந்தது.
இக்குண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங் மீது வீசப்பட்டது. வெடிக்காமல் அப்படியே மண்ணில் புதைந்து இருந்தது.
பின்னர் இக்குண்டு நிபுணர்களால் கவனமாக படிப்படியாக செயல் இழப்பு செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டு ஹாங்காங்கில் தற்போது 2-வது தடவையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு தடவை இது போன்று ஒரு பெரிய குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது.
ஹாங்காங்கில் வாங்சை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பூமியை தோண்டிய போது வெடிக்காத நிலையில் புதைந்து கிடந்த வெடி குண்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த அவர்கள் அக்குண்டை பரிசோதித்தனர். அது 1000 பவுண்டு அதாவது 455 கிலோ எடை இருந்தது.
இக்குண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங் மீது வீசப்பட்டது. வெடிக்காமல் அப்படியே மண்ணில் புதைந்து இருந்தது.
பின்னர் இக்குண்டு நிபுணர்களால் கவனமாக படிப்படியாக செயல் இழப்பு செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டு ஹாங்காங்கில் தற்போது 2-வது தடவையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு தடவை இது போன்று ஒரு பெரிய குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X