என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஆர் காங்கோவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 30 பேர் பலியானதாக தகவல்
Byமாலை மலர்30 Sep 2017 2:06 PM GMT (Updated: 30 Sep 2017 2:06 PM GMT)
டிஆர் காங்கோ நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில், 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கின்ஷாசா:
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் (டிஆர் காங்கோ) ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானம், இன்று காலை தலைநகர் கின்ஷாசாவில் உள்ள நிடோலோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதில் சுமார் 30 வீரர்கள் பயணம் செய்தனர். 2 வாகனங்கள், ஆயுதங்களும் அதில் கொண்டு செல்லப்பட்டன.
சுமார் 100 கி.மீ. தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நீல் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ராணுவம் மற்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், விமானத்தில் பயணித்த ஒருவரும் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானம் தரையை நோக்கி பாய்ந்து வந்ததை பார்த்ததாகவும், ஆனால் விழுந்த இடத்தில் தீப்பிடித்ததற்கான புகை எதுவும் வரவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் (டிஆர் காங்கோ) ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானம், இன்று காலை தலைநகர் கின்ஷாசாவில் உள்ள நிடோலோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதில் சுமார் 30 வீரர்கள் பயணம் செய்தனர். 2 வாகனங்கள், ஆயுதங்களும் அதில் கொண்டு செல்லப்பட்டன.
சுமார் 100 கி.மீ. தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நீல் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ராணுவம் மற்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், விமானத்தில் பயணித்த ஒருவரும் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானம் தரையை நோக்கி பாய்ந்து வந்ததை பார்த்ததாகவும், ஆனால் விழுந்த இடத்தில் தீப்பிடித்ததற்கான புகை எதுவும் வரவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X