search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை தொகுதி
    X
    ஜோலார்பேட்டை தொகுதி

    கே.சி.வீரமணி இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற ஜோலார்பேட்டை தொகுதி கண்ணோட்டம்

    கடந்த இரண்டு முறையும் அதிமுக வெற்றி பெற்றுள்ள ஜோலார்பேட்டை தொகுதி கண்ணோட்டம்.
    சொத்து மதிப்பு

    கே.சி. வீரமணி

    1. கையிருப்பு- ரூ. 49,000
    2. அசையும் சொத்து- ரூ. 33,83,37,743
    3. அசையா சொத்து- ரூ. 80,00,000

    தேவராஜி

    1. கையிருப்பு- ரூ. 6,57,478
    2. அசையும் சொத்து- ரூ. 39,45,416  
    3. அசையா சொத்து- ரூ. 2,10,61,000

    இதுவரை வெற்றி.....

    2011- கே.சி.வீரமணி- அ.தி.மு.க.
    2016- கே.சி.வீரமணி- அ.தி.மு.க.

    2016 தேர்தல் முடிவுகள்

    கே.சி.வீரமணி- அ.தி.மு.க.- 82,525
    கவிதா- தி.மு.க.- 71,534 
    பொன்னுசாமி- பா.ம.க.- 17,516
    ஃபையஸ் பாஷா- தே.மு.தி.க- 3,509
    திருமலை- விபிஎம்பி- 1,224
    ஓவியம் ரஞ்சன்- பா.ஜ.க.- 1,021
    தேன்மொழி- நாம் தமிழர்- 868
    லதா- பிஎஸ்பி- 700
    பி.வீரமணி- சுயே- 236
    சதீஷ்- சுயே- 198
    எம்.எஸ்.வீரமணி- சுயே- 158
    சிவக்குமார்- சுயே- 112
    நோட்டா- 1,483

    ஜோலார்பேட்டை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜோலார்பேட்டை ரெயில் நிலையம்தான்.

    ஏலகிரிமலை ஜோலார்பேட்டை தொகுதியில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலமாக உள்ளது. 1.015 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு படகு சவாரி, சிறுவர் பூங்கா, மான் பூங்கா, செயற்கை நீருற்று ஆகியவையும், ஏலகிரி மலையின் எழில்மிகு முழுத் தோற்றத்தையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வசதி கொண்ட பரணும் உள்ளன.

    ஏலகிரி மலைக்கு சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஜோலார்பேட்டையில் பெரிய ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கிருந்து சென்னை, பெங்களூரு, கோவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். இது முக்கிய ரெயில் சந்திப்பாக விளங்குகிறது.

    ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழில் பீடி தொழில் மற்றும் ஊதுபத்தி தொழிலாகும். இங்கு விவசாயம் அதிகளவில் உள்ளது. மேலும் பல்வேறு வடமாநிலத்தினர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

    தற்போது ரெயில்வே காலனியில் மட்டுமின்றி ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநிலத்தினர் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். ஜோலார்பேட்டை தொகுதி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.

    தொகுதி சீரமைப்பின் போது நாட்டறம்பள்ளி சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முதல் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளும், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளும், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளும் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன. நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியிலும், மீதமுள்ள 7 ஊராட்சிகள் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியிலும் உள்ளன.

    ஜோலார்பேட்டை தொகுதி
     கே.சி. வீரமணி, தேவராஜி

    ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஜோலார்பேட்டை நகராட்சி, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இடங்கியுள்ளன.

    இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இதர பிரிவினர் உள்ளனர்.

    மொத்தம் 1,38,466, ஆண்கள் 1,18,449, பெண்கள் 1,20,010, மூன்றாம் பாலித்தவர் 7 பேர் உள்ளனர்.

    தொகுதி சீரமைப்புக்கு பின்னர் நடந்த 2 தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த முறை மொத்தம் 267 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டது. இதனால் தற்போது 93 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் மொத்தம் 360 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    ஜோலார்பேட்டை அருகில் உள்ள சந்தைக்கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை 30 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போதிய டாக்டர்கள் இல்லாததால் மருத்துவமனை செயல்படாமல் உள்ளது. எனவே டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

    ஜோலார்பேட்டையில் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே ஜோலார்பேட்டை தொகுதியில் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வர வேண்டும். ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவர்களுக்கு ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி அமைத்து தரவேண்டும்.

    ஏலகிரிமலையில் ஏறுவதற்கு ஒரு சாலையும் அமைக்க வேண்டும். ஏலகிரிமலையில் சுமார் ரூ.100 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே உடனடியாக அதற்கான பணிகள் தொடங்க வேண்டும்.

    மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அதிமுக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருக்கும் கே.சி. வீரமணி மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தேவராஜி நிறுத்தப்பட்டுள்ளார். சரத்குமார் கட்சி சார்பில் ஆர். கருணாநிதி களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆ. சிவாவும், அமமுக சார்பில் தென்னரசு சாம்ராஜும் போட்டியிடுகின்றனர்.
    Next Story
    ×