என் மலர்

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கஸ்டமர் கேர் அழைப்புகளை எதிர்கொள்ள இதை செய்யலாம் - டிராய் பரிந்துரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முறைப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த டிராய் பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முறைப்படுத்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பரிந்துரை வழங்கியுள்ளது.

    இதன் மூலம் விளம்பரம் குறுந்தகவல்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்படுவதை உறுதி செய்ய முடியும். டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விளம்பர கொள்கையின் மூலம் குரல் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற தகவல் பரிமாற்றங்களை செய்யும் வாடிக்கைாயளர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

    2010-ம் ஆண்டு முதல் இதுவரை மட்டும் சுமார் 23 கோடி வாடிக்கையாளர்கள் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. எனினும் பதிவு செய்யப்படாத விளம்பர நிறுவனங்கள் சார்பில் எண்ணற்ற அழைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக அமைகிறது. சமீப காலங்களில் இதுபோன்ற விளம்பர அழைப்புகள் அதிகரித்து இருக்கிறது.


    கோப்பு படம்

    டிராய் பரிந்துரை செய்திருக்கும் பிளாக்செயின் தொழில்நுட்பம் க்ரிப்டோகிராஃபி முறையில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாத்து, அவசியம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவற்றை வழங்கும் படி செய்யும். உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் வழிமுறையில் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றோர் மட்டுமே தகவல்களை இயக்க முடியும் அதுவும் சேவையை வழங்கும் போது மட்டுமே இவை வழங்கப்படும்.

    புதிய தொழில்நுட்பம் சார்ந்த விதிமுறைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களிடையே நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. பிளாக்செயின் பயன்படுத்துவது சார்ந்த பரிந்துரை மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் மீதான விவாதங்கள் ஜூன் 11-ம் தேதி முதல் துவங்கும் என டிராய் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×