என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1600 கோடி டாலர்களுக்கு பிளிப்கார்ட் பங்குகளை வாங்கும் வால்மார்ட்
Byமாலை மலர்5 May 2018 6:41 AM GMT (Updated: 5 May 2018 6:41 AM GMT)
பிளிப்கார்ட் தளத்தில் கனிசமான பங்குகளை அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனம் சுமார் 1600 கோடி டாலர்களை கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
பிளிப்கார்ட் நிறுவன பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக பிளிப்கார்ட் தளத்தின் 40% பங்குகளையும், பின் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 73% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 73% பங்குகளின் மதிப்பு 1600 கோடி அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் மே 3-ம் தேதி கையெழுத்தானதாகவும், இதற்கென வால்மார்ட் 1460 கோடி டாலர்களை செலவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிளிப்கார்ட் மதிப்பு 2000 கோடி டாலர்கள் என்ற நிலையில் வால்மார்ட் சார்பில் பிளிப்கார்ட் மதிப்பு 2200 கோடி என கணக்கிடப்பட்டு சுமார் 1600 கோடிகளை செலவிட முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கோப்பு படம்
இதேபோன்று கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனமும் சுமார் 300 கோடி டாலர்களை இதில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு விவாதங்களுக்கு பின் இரு நிறுவனங்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் ரொக்கம் மற்றும் பங்குகள் என இரண்டும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 55% மதிப்புடைய ரொக்கம் மூலம் பிளிப்கார்ட் தளத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் வெளியேறுவர் என கூறப்படுகிறது.
டென்சென்ட், மைக்ரோசாஃப்ட், டைகர் குளோபல் போன்ற முதலீட்டாளர்கள் முழுமையாக வெளி்யேறமாட்டார்கள் என கூறப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் 20% பங்குகளை வைத்திருக்கும் சாஃப்ட்பேங்க் 400 கோடி டாலர்களை பெற்று கொண்டு பிளிப்கார்ட்-இல் இருந்து முழுமையாக வெளியேறலாம் என கூறப்படுகிறது.
வால்மார்ட் பேங்கர்-ஆK ஜெ.பி. மோர்கன், சட்ட வல்லுநர் குழுவில் அமர்சந்த் மங்கள்தாஸ் மற்றும் நிர்வாக ஆலோசகராக பெயின் & கோ இடம்பெற்றிருக்கின்றன. இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு எந்த நிறுவனம் சார்பிலும் தகவல் வழங்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X