என் மலர்
செய்திகள்

ஏர்டெல் ரூ.149: பழைய சலுகை ஆனால் புதிய நன்மை
இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டியில் ஏர்டெல், தனது பழைய திட்டத்தில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.
புதுடெல்லி:
இந்திய டெலிகாம் சந்தையில் கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ, லாபம் பார்க்க துவங்கிவிட்ட போதிலும் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களிடைய நிலவி வரும் போட்டி தொடர்ந்து நீடிக்கிறது. டெலிகாம் நிறுவனங்களிடையே விலை போட்டி நிலவினாலும், ஆதாயம் பெறுவது நாம் தான் என்ற வகையில் நன்மை நமக்கே.
அடிக்கடி புதிய திட்டங்களை அறிவிக்கும் டிரென்ட் முடிந்து, பழைய விலையில் சலுகைகளை மட்டும் புதிதாக வழங்கும் டிரென்ட் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாக இருக்கிறது. அதன்படி டெலிகாம் வாடிக்கையில் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் இணைந்திருக்கிறது.
ஏர்டெல் ரூ.149 பிரீபெயிட் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த சலுகைகளில் சில வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ரூ.149 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் திட்டத்திலேயே வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
எனினும் டேட்டாவில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், 28 நாட்களுக்கும் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டாவையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதற்கட்டமாக இந்த மாற்றம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
முன்னதாக இதே திட்டத்தில் 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா, ஏர்டெல் எண்களுக்கு மட்டும் வாய்ஸ் கால்கள் வழங்கப்பட்டது. புதிய மாற்றம் வாடிக்கையாளர்களை எந்த நெட்வொர்க் எண்களுக்கும் (ரோமிங் உட்பட) அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்கிறது. இதேபோன்ற திட்டத்தில் ரூ.179 ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் வழங்குகிறது.
சமீபத்தில் ஜியோ தனது பிரீபெயிட் திட்டங்களை மாற்றியமைத்தது. இதன் சாஷெட் திட்டங்கள் ரூ.19-க்கு 0.15 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 20 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 திட்டத்தில் தினமும் 5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Next Story






