என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கிய டாஸ்மாக் அதிகாரி விசாகன் இடமாற்றம்
- அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.
- விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
சென்னை:
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி மோசடி புகார் தொடர்பாக அதன் தலைமையகம் மற்றும் எழும்பூரில் உள்ள நிர்வாக இயக்குனர் விசாகனின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர்.
நிர்வாக இயக்குனர் விசாகன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.
இந்த சோதனைக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் முறையிட்ட பிறகு மேற்கொண்டு விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் டாஸ்மாக் அதிகாரிகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகினார்கள்.
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வேறு துறைக்கு இடமாற்றம் கேட்டுள்ளதாகவும் அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனவே விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.






