என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை- மதியம் 1 மணிவரை நீடிக்கும் என எச்சரிக்கை
    X

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை- மதியம் 1 மணிவரை நீடிக்கும் என எச்சரிக்கை

    • பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
    • சென்னையில் நாளை முதல் மழை அதிகரிக்கும் எனவும் டிசம்பர் 1-ந்தேதி வரை மழை நீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன் படி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் பனி படந்து காணப்பட்டு வந்தது. இதையடுத்து நேரம் செல்ல செல்ல பனி விலகி மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவி வந்தது. இதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பிராட்வே, எழும்பூர், சேப்பாக்கம், சாந்தோம், அடையாறு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம் பகுதிகளில் மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம் போன்ற பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழை மதியம் 1 மணிவரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே போல் ராமேஸ்வரம், தஞ்சை, மதுரை, செங்கல்பட்டு, திருச்சி, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதனிடையே, சென்னையில் நாளை முதல் மழை அதிகரிக்கும் எனவும் டிசம்பர் 1-ந்தேதி வரை மழை நீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

    Next Story
    ×