என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூத்துக்குடியில் ஏற்றுமதி குடோனில் திடீர் தீ விபத்து- பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
    X

    தூத்துக்குடியில் ஏற்றுமதி குடோனில் திடீர் தீ விபத்து- பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

    • தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய பாகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வி.இ.ரோட்டில் டி.எஸ்.எப். வணிக வளாகம் எதிரே தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு குடோன் உள்ளது.

    இங்கிருந்து தும்புகள் பேக் செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தும்பு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை வரத் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து அருகே குடியிருப்புகளில் இருந்தவர்கள் உடனடியாக தும்பு குடோன் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகர தீயணைப்புத் துறையினர் 2 வண்டிகளில் காவலாளி மாவட்ட அலுவலர் கணேசன், உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தூத்துக்குடி நிலைய அலுவலர் முருகையா மற்றும் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை உடனடியாக போராடி அணைத்ததால் அருகே இருந்த குடியிருப்புகள் மற்றும் திருமண மண்டபம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய பாகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×