என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
- ஜி.கே.மணி, பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வருகின்ற 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் ஜி.கே.மணி, பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வருகின்ற 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் குறித்தும், நாளை அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளுவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Next Story






