என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
    X

    காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

    • மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×