என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்
    X

    11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தருமபுரி, கள்ளக்கறிச்சி, கிருஷ்ணகிரி பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×