என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கந்தம்பட்டி பகுதியில் நாளை, நாளை மறுநாள் மின் நிறுத்தம்
    X

    கந்தம்பட்டி பகுதியில் நாளை, நாளை மறுநாள் மின் நிறுத்தம்

    • கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேற்கு கோட்டத்திறகுட்பட்ட கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் போடிநாயக்கன்பட்டி மின்பாதையில் நாளை (14-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெயில் நகர், பெரியார் நகர், ஜங்சன், ஆண்டிப்பட்டி, கபிலர் தெரு, பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் மல்லமூப்பம்பட்டி மின்பாதையில் நாளை மறுநாள் (15-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாய்க்கன்பட்டி, ராமகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்தார்.

    Next Story
    ×