என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு: ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்
    X

    எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு: ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்

    • எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு.
    • அவர் இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்றார் ஓபிஎஸ்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கத்தில் அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அ.தி.மு.க.வில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. அப்போது தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

    தொண்டர்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கியது அ.தி.மு.க. ஆனால், அது இப்போது அவ்வாறு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்கும்.

    எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கம் கருத்தை வழிமொழிகிறேன். எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு.

    இன்றைக்கு கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கடந்த மக்களவை தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை அ.தி.மு.க. இழந்திருக்கிறது. 7 மக்களவை தொகுதிகள் என்றால் 42 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது.

    பொதுச்செயலாளராக பொறுப்பேற்று சந்தித்த 11 தேர்தல்களில் படுதோல்வி அடைந்து அ.தி.மு.க.வை பாதாளத்திற்குத் தள்ளிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது.

    தனது ஆதரவாளர்களை கூட்டி வைத்துக் கொண்டு போலியான பொதுக்குழுவை உருவாக்கி, ஒற்றை தலைமைதான் வேண்டும், பழனிசாமி சிறப்பாக கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார், பழனிசாமி சிறப்பாக முதல்வராக இருக்கிறார். அவர் வந்தால் அனைத்து தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றி அடைவோம் என்று சொல்லி தான், ஒரு மிகப்பெரிய மாயையை உருவாக்கினார்.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×