என்எல்சி விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை அணுகும் வரை போராட்டத்தில் ஈடுபடக் கூடாது- நீதிமன்றம்

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு.என்எல்சி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி.
என்எல்சி விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை அணுகும் வரை போராட்டத்தில் ஈடுபடக் கூடாது- நீதிமன்றம்
Published on

வேலை நிறுத்த முடிவை எதிர்த்து என்எல்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிாலளர்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுகவும், அதுவரை போராட்டத்தில் ஈடுபடக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

என்எல்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து என்எல்சி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com