என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: தனியார் வானிலை ஆர்வலர்
- வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு .
- 12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் பெரும்பாலான இடத்தில் பரவலாக மழை பெய்தது. அதன்பின் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக மதியம் நேரத்தில் அனல் காற்று வீசி வருகிறது.
கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மதியம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வரும் 13ஆம் தேதி வரை சென்னையில் மழை தொடரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.