என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்று உருவாகும் புதிய காற்றழுத்தம்
- அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்காக ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
- முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்காக ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் என கருதப்பட்ட நிலையில், நிலப்பரப்புக்கு அருகே வரும் போது அது வலுவிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






