என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
- ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- அப்பல்லோ மருத்துவமனையில் இல.கணேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவர் தற்போது நாகாலாந்து மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. தற்போது சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.
இன்று அதிகாலையில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்று காலை 6.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மயங்கிய நிலையிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.






