என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதாக மாறிவிட்டது - அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
- எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மவுன சாட்சியாக அமர்ந்திருந்தார்.
- கீழடி விவகாரத்தில் தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் பா.ஜ.க., இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிக்கும்போது, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்தது அவமானகரமாக உள்ளது.
அண்ணா பெயரை கொண்ட அ.தி.மு.க. என்பது அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அ.தி.மு.க.வாக மாறிவிட்டது. திராவிட இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட ஒரு மேடையில் அவரை பேச விடாது, அமித்ஷா மட்டும் பேசி கூட்டணியை அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மவுன சாட்சியாக அமர்ந்திருந்தார். இது மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறி வருவதை காட்டுகிறது.
கீழடி விவகாரத்தில் தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது.
அப்படி ஒப்புக்கொண்டால் இந்தியை திணிக்க முடியாது என பா.ஜ.க. எண்ணுகிறது. அதே சமயத்தில் மக்களை பிளவுபடுத்தி மத ரீதியாக பிரித்து வட இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது போல, இங்கேயும் செயல்பட அவர்கள் எண்ணுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அப்படி கிடையாது. அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். பெரியார், அண்ணா திராவிட இயக்க தலைவர்கள் வழியில் வந்த கொள்கைகளை பார்ப்பவர்கள். அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






